Home One Line P1 மஇகா தலைமையகத்தில் தைப்பொங்கல் பொது உபசரிப்பு

மஇகா தலைமையகத்தில் தைப்பொங்கல் பொது உபசரிப்பு

615
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று கொண்டாடப்படும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மஇகா தலைமையகத்தில் தைப்பொங்கல் பொது உபசரிப்பு நடத்தப்படுகிறது.

இன்று புதன்கிழமை (ஜனவரி 15) மாலை 5.00 மணி முதல் மஇகா தலைமையக வளாகத்தில் பொங்கல் பொது உபசரிப்பு நடத்தப்படுகிறது.

இந்த உபசரிப்பில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் உள்ளிட்ட மஇகா தலைவர்களும், மத்திய செயலவை உறுப்பினர்களும், மஇகா கிளைத் தலைவர்களும், உறுப்பினர்களும் திரளாகக் கலந்து கொள்வர்.