Home நாடு சரவணன் தாப்பாவில் ஹரி ராயா அன்பளிப்பு வழங்கினார்!

சரவணன் தாப்பாவில் ஹரி ராயா அன்பளிப்பு வழங்கினார்!

136
0
SHARE
Ad

தாப்பா : ஹரிராயா நோன்புப் பெருநாளை முன்னிட்டு தனது தாப்பா நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ எம்.சரவணன் அன்பளிப்புகளை வழங்கினார்.

கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி பீடோர் இடைநிலைப் பள்ளிக்கு வருகை தந்த சரவணன், ஐந்தாம் ஆறாம் படிவ மாணவர்களுக்கு அன்பளிப்புகளை நேரில் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 9 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1000 மாணவர்கள் பங்கு பெற்றனர்.

மாணவர்கள் அனைவருக்கும் ஹரி ராயா வாழ்த்துகளையும் சரவணன் தெரிவித்துக் கொண்டார்.