ரோம் – இத்தாலியின் மையப் பகுதியைத் தாக்கிய நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 159 ஆக உயர்ந்துள்ளது.
மீட்புக் குழுவினர் தீவிரமாக இயங்கி, குவிந்து கிடக்கும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடித்து மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோப்ப நாய்களும் மீட்புப் பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இருப்பினும் மீட்புக் குழுவினர் தங்களின் பணிகளில் சிரமங்களை எதிர்நோக்குவதால், மரண எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகின்றது.
Comments