மேலும் 2 மாணவிகள் உள்பட 4 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கல்லூரி வாசல் அருகே நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் உட்பட முக்கியத் தலைவர்கள் இச்சம்பவம் குறித்து தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கிண்டியில்,தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் உயிரிழப்பு: உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கும்,சக மாணவ மாணவிகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.
Comments