மேலும், அபிராமி ராமநாதன் கூறுகையில், “நாங்கள் ஜிஎஸ்டி வரிக்கு எதிரானவர்கள் அல்ல. கேளிக்கை வரியை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். ஜிஎஸ்டி 28 விழுக்காடும், கேளிக்கை வரி 30 விழுக்காடும் விதித்தால் நாங்கள் எப்படி திரையரங்குகளில் காட்சிகளை ஓட்டுவது?” என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ்த் திரைப்பட வர்த்தக சபையின் அறிவிப்பின் படி, இன்று தமிழகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் காட்சிகள் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன.