“தைரியமிருந்தால் சாஹிட் என்னுடைய அடையாள அட்டை நகலைக் காட்டட்டும்” என மகாதீர் சவால் விடுத்துள்ளார்.
“சாஹிட் ஒரு பொய்க்காரர். என்னுடைய முதல் அடையாள அட்டை நான் எடுக்கும்போது நான் பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். அது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அவர் பார்த்ததாகக் கூறும் அடையாள அட்டையைக் காட்டட்டும். நானும் பார்க்க விரும்புகிறேன்” என மகாதீர், பெர்சாத்து கட்சியின் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில் தெரிவித்திருக்கிறார்.
“அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி போல, இதனையும் சாஹிட் அரசாங்க இரகசியம் என்று மறைக்கக்கூடாது. தைரியமாக வெளியிட வேண்டும்” எனவும் மகாதீர் சவால் விடுத்துள்ளார்.