அச்சந்திப்பின் போது, பிரதமர் தவறியும் தேசிய முன்னணிக்கு வாக்களிக்க வேண்டாமென்றும் கேமரன் மலை வாழ் மக்களைக் கேட்டுக் கொண்டதோடு, தமது ஆயுட்காலம் உள்ள வரையில் நாட்டிற்குத் தேவையான மாற்றங்களை செய்துக் கொண்டே இருக்கப்போவதாகக் கூறினார்.
சூழ்ச்சிக்காக பூர்வக்குடி சமூகத்திலிருந்து வேட்பாளரை நிறுத்தி இருக்கும் தேசிய முன்னணியை, ஒரு போதும் நம்பி விட வேண்டாமென்றும், அவர்கள் பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள் எனவும் பிரதமர் கூறினார்.