கமல்ஹாசன் மீது பலருக்கு திருப்தி இல்லையென்றும், அவருக்கும், கட்சி அலுவலகங்களுக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி உள்ளது எனவும் குமரவேல் குறிப்பிட்டுள்ளார். கட்சிக் குறித்த விவரங்கள் அனைத்தும் வாட்ஸ் அப் செயலி மூலம் மட்டுமே செயல்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
ஆயினும், கட்சியின் கொள்கைகளை மீறியதாலும், கடலூரில் தாம் வேட்பாளராக போட்டியிடப் போவதாக செய்திகளைப் பரப்பியதாலும் குமரவேலுவின் முடிவினை கட்சி ஏற்றுக் கொள்கிறது எனத் தெரிவித்துள்ளது.
இன்று புதன்கிழமை மக்கள் நீதி மய்யக் கட்சியின் வேட்பாளர்கள் குறித்த முழு பட்டியலை கமல்ஹாசன் வெளியிடுவார் எனக் கூறப்பட்டுள்ளது.