ஆயினும், தற்போது, அவ்வீட்டின் முன், அந்த அறிக்கையானது காணாமல் போனது குறித்து தேசிய வழக்கறிஞர் மன்றம் குழப்பத்தில் உள்ளது.
கடந்த வியாழனன்று தஞ்சோங் பூங்காவில், ஜோ லோவின் சொகுசு வீட்டின் நுழைவாயிலில் தெளிவாக அறிவிக்கப்பட்டிருந்த அந்த அறிவிப்பை அகற்றுவதற்கு வழக்கறிஞர் மன்றம் எந்த விதத்திலும் பொறுப்பல்ல எனக் குறிப்பிட்டுள்ளது.
“நாங்கள் வெளியிட்ட அறிக்கையை ஏன் நாங்களே அகற்ற வேண்டும்? இந்த விசயம் குறித்து இன்னமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது” என மன்ற அதிகாரி ஒருவர் கூறினார்.
அகற்றப்பட்ட அறிவிப்புக்கு மாறாக மற்றொரு அறிவிப்பு வெளியிடப்படுமா என வினவிய போது, அது குறித்து இன்னும் விவாதித்து வருவதாக அவர் கூறினார்.