தாமான் மெலாவாத்தி பகுதியில் அமைந்துள்ள தமிழ்ப் பள்ளியின் பின்புறத்திலுள்ள வீடமைப்புப் பகுதியில் இந்த மோதல் நிகழ்ந்து ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இதில் ஒரு ஹெலிகாப்டர் பத்திரமாகத் தரையிறங்க முடிந்தது. இரண்டு ஹெலிகாப்டர்களும் சுபாங் விமான நிலையத்திலிருந்து காலை 11.11 மணியளவில் புறப்பட்டன. 22 நிமிடங்கள் கழித்து விபத்து நேர்ந்தது. 1,300 அடி உயரத்தில் நடுவானில் இரு ஹெலிகாப்டர்களும் மோதிக் கொண்டன.
உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினரோடு கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் அஸ்மின் அலியும் அங்கு காணப்பட்டார்.
புக்கிட் அந்தாராபங்சா பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தனக்கு அந்த சம்பவம் குறித்து தகவல் தரப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து அங்கு வந்து சேர்ந்ததாகவும் அஸ்மின் அலி தெரிவித்தார்.
மற்றொரு ஹெலிகாப்டரில் இருந்து இருவர் சம்பவம் நடந்த இடத்திலேயே மரணமடைந்தனர்.
மரணமடைந்த இருவர் 56 வயது முகமட் சாப்ரி பகாரோம், 44 வயது முகமட் இர்பான் பிக்ரி முகமட் ராவி என அடையாளம் காணப்பட்டனர்.
இதற்கிடையில் இந்த விபத்து குறித்த முழு அறிக்கையை போக்குவரத்து அமைச்சு தயாரிக்கும் என போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்தார்.