ஆனால், நீதித்துறை தொடர்ந்து செயல்படும் என்று அவர் கூறினார். மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் எப்போதும் போல செயல்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
முன்னதாக, இன்று நாடு முழுவதிலும் ஆகஸ்டு 1 வரை அவசர நிலையை மாமன்னர் அறிவித்திருந்தார். இது நாட்டில் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் மேற்கொள்ளப்படுவதாக அரண்மனை ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்திருந்தது.
Comments