கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 30) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,133 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,125 பேர் உள்நாட்டினர் 8 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர். இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 344,018 ஆக அதிகரித்துள்ளன.
கடந்த ஒரு நாளில் மட்டும் 1,148 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். தொற்றுகளில் இருந்து குணமாகி இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 328,554 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஐவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 1,265- ஆக உயர்ந்துள்ளது.
மாநிலங்கள் அளவில் மிக அதிகமான சம்பவங்கள் 401 என்ற எண்ணிக்கையில் சிலாங்கூரில் பதிவாகி உள்ளன.