Home One Line P1 அம்னோ கட்சித் தேர்தல்: பிளவுகளை ஏற்படுத்தும்!

அம்னோ கட்சித் தேர்தல்: பிளவுகளை ஏற்படுத்தும்!

628
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சித் தேர்தல் நடத்த பல தரப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், அம்னோ அடிமட்டத் தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளதாக கூட்டரசு பிரதேச அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் வான் அகில் தெரிவித்துள்ளார்.

அவர்களில் சிலர் 15- வது பொதுத் தேர்தலுக்கு முன் கட்சித் தேர்தல் நடத்தப்பட்டால் கட்சி பிளவுபடும் என்று நம்புவதாக அவர் கூறினார்.

“15- வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தற்போதுள்ள தலைமை மீது நம்பிக்கை இல்லாத பல அடிமட்ட உறுப்பினர்கள் இருப்பதால் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை தனிப்பட்ட முறையில் நான் நிராகரிக்கவில்லை. ஆயினும்கூட, 15- வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு தேர்தல் ஒத்திவைக்கப்பட விரும்புபவர்களின் கருத்தையும் நான் நிராகரிக்கவில்லை.

#TamilSchoolmychoice

“அவர்களைப் பொறுத்தவரை, நாம் தேர்தல் இயந்திரங்களைத் தயார் படுத்துகிறோம், கட்சித் தேர்தல் நிச்சயமாக அம்னோவின் தயார் நிலைக்கு இடையூறாக இருக்கும். அது தவிர, இது கட்சிக்குள் பிளவுகளை உருவாக்கும்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார் .

மேலும், கருத்து தெரிவித்த வான் அகில், அம்னோ பிளவுபட்டால் எதிர்க்கட்சிக்கு அது பயனளிக்கும் என்பது உறுதி என்று கூறினார்.

“உச்சமன்றக் குழு கட்சியின் உள் குழப்பத்திற்கு வழிவகுக்கும் முக்கிய பிரச்சனைகளை புரிந்துகொண்டு அடையாளம் காண வேண்டும். கடினமான முடிவாக இருந்தாலும் கட்சியின் நன்மைக்கான முடிவுகளை எடுக்க வேண்டும். மிக முக்கியமாக, தனிப்பட்ட நன்மைக்காக செயல்படும் எந்தவொரு தரப்பின் முயற்சிக்கும் உச்சமன்றம் வழிவிடக்கூடாது,” என்று அவர் கூறினார்.