Home நாடு கொவிட்-19: 61 பேர் மரணம்- அதிகமாக 8,290 பேர் பாதிப்பு

கொவிட்-19: 61 பேர் மரணம்- அதிகமாக 8,290 பேர் பாதிப்பு

486
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (மே 28) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 8,290-ஆக உயர்ந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 549,514- ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் பதிவான 8,290 தொற்று சம்பவங்களில் 8,288 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 2 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,814-ஆக பயிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 474,139-ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 72,823 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 808 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 403 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 61-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 2,552-ஆக உயர்ந்திருக்கிறது.

மிக அதிகமான தொற்றுகளை சிலாங்கூர் மீண்டும் பதிவு செய்தது. 2,052 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்தது. அதனை அடுத்து கிளந்தானில் 851 தொற்றுகள் பதிவாயின. அடுத்த நிலையில் 830 தொற்றுகளை கோலாலம்பூர் பதிவு செய்துள்ளது. ஜோகூரில் 762 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.