இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 610,574- ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் பதிவான 7,452 தொற்று சம்பவங்களில் 7,444 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 8 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.
கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 85,607 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 886 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 446 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 109-ஆக உயர்ந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 3,291 ஆக உயர்ந்திருக்கிறது.
அதனை அடுத்து நெகிரி செம்பிலான் 843 தொற்றுகளை ஒரு நாளில் பதிவு செய்தது.
கோலாலம்பூரில் 678 தொற்றுகள் பதிவாயின. அதற்கு அடுத்த நிலையில் 651 தொற்றுகளை சரவாக் பதிவு செய்துள்ளது. ஜோகூர் மாநிலத்தில் 412 சம்பவங்கள் பதிவாகி உள்ளன