“செப்டம்பர் 2020- இல் கொவிட் -19- இன் மூன்றாவது அலை பரவியது, தடுப்புக்காவல் மையங்களில் இருந்து தோன்றியது. தெளிவாக, அது சமூகங்களுக்குள் பரவி சமூகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்.
“ஒரு வருடத்திற்கும் குறைவான சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்காக, மீதமுள்ள மூன்று மாதங்களுக்கும் குறைவான தண்டனையுடன், உரிமம் பெற்ற கைதிகள் திட்டத்தை (பிபிஎஸ்எல்) அமல்படுத்துவதை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும், ,” என்று அக்குழு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அபராதம், சமூக சேவை மற்றும் சாதனக் கண்காணிப்புடன் வீட்டுக் காவல் போன்ற சிறிய குற்றங்களுக்கான சிறைத்தண்டனைக்கு மாற்று தண்டனைகளை ஆராயவும் குழு பரிந்துரைத்தது.