மரண எண்ணிக்கை 225 ஆகப் பதிவாகியது என சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிக அளவில் இருந்து வருகிறது. மீண்டும் 200-க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகி இருக்கின்றன.
இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 13,302 ஆக உயர்ந்திருக்கிறது.
மரணமடைந்தவர்களில் 190 பேர் மருத்துவமனைகளிலேயே மரணமடைந்திருக்கின்றனர். மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் 35 பேர்கள் ஆகும்.
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் புள்ளிவிவரங்களை கீழ்க்காணும் வரைபடத்தில் காணலாம்.
புதிய தொற்றுகளைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,466,512 என பதிவாகியது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,060 ஆகும். இவர்களில் சுவாசக் கருவிகளின் உதவியோடு 540 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலங்கள் ரீதியான புள்ளிவிவரங்களை மேற்கா