Home அரசியல் சபா அடையாள அட்டை விவகாரம்: எல்லா பழியையும் மகாதீர் மீது சுமத்தாதீர்கள் – அன்வார்

சபா அடையாள அட்டை விவகாரம்: எல்லா பழியையும் மகாதீர் மீது சுமத்தாதீர்கள் – அன்வார்

676
0
SHARE
Ad

8eeec836e51f2e86a6d0277722953690கோத்தா கினபாலு, செப் 19 – சபா அடையாள அட்டை விவகாரம் தொடர்பாக இன்று அரச விசாரணை ஆணையத்திடம் சாட்சியம் அளித்த எதிர்கட்சித் தலைவர் அன்வார், அதிரடித் திருப்பமாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீரை தற்காத்துப் பேசியுள்ளார்.

“நானும் நிறைய ஊடகங்களின் அறிக்கைகளை கவனித்து வருகிறேன். எல்லோரும் மகாதீர் மீது பழி போடுகிறார்கள். இது சரியல்ல” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் புராஜக்ட் ஐசி தொடர்பாக கருத்துரைத்த அன்வார், “அப்படி ஒரு முறை மகாதீர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே இருந்துள்ளது, அவர் இருக்கும் போதும் நடந்துள்ளது, அதற்குப் பின்பும் தொடர்ந்துள்ளது. ஆனால் அதை நாம் நிறுத்தியாக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த வாரம் அடையாள அட்டை விவகாரம் தொடர்பாக மகாதீர் சாட்சியம் அளித்ததைத் தொடர்ந்து இன்று காலை கோத்தா கினபாலு நீதிமன்ற வளாகத்தில் அன்வார் இப்ராகிம் சாட்சியம் அளித்தார்.