கடந்த ஆண்டு 5 லட்சத்து 17,139 மாணவர்கள் யூபிஎஸ்ஆர் தேர்வு எழுதியதில் 45,054 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ பெற்ற வேளையில், இவ்வாண்டு தேர்வு எழுதிய 4 லட்சத்து 66,167 மாணவர்களில் 42,646 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ பெற்றுள்ளனர்.
மேலும், தேசிய புள்ளிகள் சதவிகிதம் (ஜிபிஎன்) அடிப்படையில் நாடு தழுவிய நிலையில் யூபிஎஸ்ஆர் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 0.0.4 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பதையும் தாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாக மஹ்முட் தெரிவித்தார்.
ஆனால், ‘சி’ நிலை தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் 56.94 சதவிகிதத்தில் இருந்து 56.28 சதவிகிதமாக சரிவு கண்டுள்ளது என்றும், ‘டி’, ‘ஈ’ நிலைத் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 3.36 சதவிகிதத்தில் இருந்து 3.42 சதவிகிதமாக சரிவு கண்டுள்ளது என்றும் மஹ்முட் குறிப்பிட்டார்.