இந்த ஒப்பந்தத்தின் மூலம் எதிர்வரும் 2050 வரை இந்த ரயில் திட்டத்துக்கான மின்சாரத்தை தேசிய மின்சார வாரியம் வழங்கி வரும். இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 173.1 மில்லியன் ரிங்கிட்டாகும்.
காஜாங் – சுங்கைபூலோ துரித ரயில் திட்டத்தின் முதல் கட்டம் 2016 இறுதி வாக்கில் முடிவுற்று ரயில் சேவைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களுள் ஒன்றாக பிரதமர் நஜிப்பால் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களில் முதன்மை வகிப்பது இந்த துரித ரயில் திட்டமாகும்.