Home நாடு புத்ரா ஜெயா வரைக்குமான எம்ஆர்டி சேவை – பிரதமர் தொடக்கி வைத்தார்

புத்ரா ஜெயா வரைக்குமான எம்ஆர்டி சேவை – பிரதமர் தொடக்கி வைத்தார்

400
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : ஏற்கனவே சுங்கை பூலோவில் இருந்து கம்போங் பத்து வரையில் இயங்கி வந்த எம்ஆர்டி ரயில் சேவை, இன்று வியாழக்கிழமை மார்ச் 16 முதல் எம்ஆர்டி 3 என விரிவாக்கம் கண்டுள்ளது. புத்ரா ஜெயா வரைக்கும் செல்லும் இந்த இரயில் சேவையால் பொதுப் போக்குவரத்து மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஆர்டி 3 சேவையைத் தொடக்கி வைத்த பிரதமர் அன்வார் இப்ராகிம் அடுத்த 2 வாரங்களுக்கு பொதுமக்கள் இந்த சேவையை இலவசமாகப் பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.