Home இந்தியா சத்குருவைச் சந்தித்தார் சரவணன்

சத்குருவைச் சந்தித்தார் சரவணன்

842
0
SHARE
Ad

சென்னை : அண்மையில் தமிழ் நாட்டுக்கு வருகை தந்திருந்த மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆன்மீகத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களையும் சந்தித்து நல்லாசிகள் பெற்றார்.

தனது தமிழ் நாட்டுக்கு வருகையின்போது பல நிகழ்ச்சிகளில் சரவணன் கலந்து கொண்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சரவணன் மரியாதை நிமித்தம் சந்தித்து நலன் விசாரித்தார்.

#TamilSchoolmychoice

அதன் பின்னர் மக்கள் முதல்வருடன் மனிதநேயத் திருநாள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  சென்னை கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் மேற்குப் பகுதி திமுக சார்பில் ‘அயல்நாடு போற்றும் தமிழ்நாடு புகழரங்கம்’ என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

வணிகத் துறை ஆய்வாளர் கார்த்திக் எழுதிய பணப் புழக்கம் என்னும் நூலின் வெளியீட்டு விழாவிலும் சரவணன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

பழனிமலை முருகன் கோவிலுக்கும் சரவணன் வருகை தந்தார்.