![](https://selliyal.com/wp-content/uploads/2023/03/saravanan-tamil-nadu-12032023-1-e1678637749682.jpg)
சென்னை : மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமிழ் நாட்டுக்கு வருகை தந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
![](https://selliyal.com/wp-content/uploads/2023/03/saravanan-tamil-nadu-12032023-3.jpg)
சென்னை வந்தடைந்த சரவணனை அவரின் நண்பர்களும் ஆதரவாளர்களும் வரவேற்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சரவணன் மரியாதை நிமித்தம் சந்தித்து நலன் விசாரித்தார்.
அதன் பின்னர் மக்கள் முதல்வருடன் மனிதநேயத் திருநாள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அமைச்சர் சேகர் பாபுவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
![](https://selliyal.com/wp-content/uploads/2023/03/saravanan-tamil-nadu-12032023-2.jpg)
சென்னை கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் மேற்குப் பகுதி திமுக சார்பில் ‘அயல்நாடு போற்றும் தமிழ்நாடு புகழரங்கம்’ என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
வணிகத் துறை ஆய்வாளர் கார்த்திக் எழுதிய பணப் புழக்கம் என்னும் நூலின் வெளியீட்டு விழாவிலும் சரவணன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
விமானம் மூலம் திருச்சி சென்றடைந்த சரவணனை அங்குள்ள அவரின் நண்பர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர். அவர் திருச்சி சென்ற அதே விமானத்தில் தமிழ் நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், மன்னார் குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா இருவரும் சென்றனர். திருச்சி விமான நிலையத்தில் சரவணனுக்கு சிறப்பான வரவேற்பு நல்கப்பட்டது.
பழனிமலை முருகன் கோவிலுக்கும் சரவணன் வருகை தந்தார்.
சரவணனின் தமிழ் நாட்டு வருகை தொடர்பான படக்காட்சிகளை இங்கே காணலாம்: