மலாயாப் பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் ஃபாமி சைனோல் தலைமையிலான மாணவர் சங்கம் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
ஆனால், பல்கலைக் கழகத்தின் உள்விவகாரங்களின் நாங்கள் தலையிட மாட்டோம் என்றும் பல்கலைக் கழகத்தின் வாயிலுக்கு வெளியேதான் நாங்கள் காவல் இருப்போம் என்றும் காவல் துறை தலைவர் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டால், அன்வார் இப்ராகிம் பல்கலைக் கழக வாயிலிலேயே உரையாற்றுவார் என்றும் அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் இணையத் தள தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(மேலும் செய்திகள் தொடரும்)