அதையடுத்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் பதவிக்கு தற்போது பிரான்ஸ் நாட்டுக்கான தூதராக உள்ள அருண் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்சில் மேற்கொள்ள உள்ள பயணத்துக்குப் பிறகே அருண் சிங் அமெரிக்க தூதராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.
வாஷிங்டனில் 5 ஆண்டுகள் இந்தியத் துணைத் தூதராகப் பொறுப்பு வகித்துள்ள அருண் சிங், 1979-ஆம் ஆண்டு ஐ.எஃப்.எஸ். பிரிவைச் சேர்ந்தவர். இந்திய வெளியுறவுத் துறையில் பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கான பிரிவுகளில் பணி புரிந்துள்ளார் அருண்சிங்.
Comments