Home உலகம் மியான்மர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஆங் சாங் சூகீ – இனப்படுகொலை தடுக்கப்படுமா?

மியான்மர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஆங் சாங் சூகீ – இனப்படுகொலை தடுக்கப்படுமா?

409
0
SHARE
Ad

YANMAR-POLITICSநைபிடாவ், ஜூலை 12 – மியான்மர் எதிர்கட்சித் தலைவரான ஆங் சாங் சூகீ, தனது கட்சி எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றால், மக்களிடம் அதிகரித்து இருக்கும் வேற்றுமையைக் களைவதே தங்களின் முதல் பணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆங் சாங் சூகீ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை நாங்கள் எடுத்ததற்கு மிக முக்கியக் காரணம் நாட்டில் கைவிடப்பட்டு இருக்கும் ஜனநாயகத்தை நிலை நாட்டத்தான். ‘என்டிஎல்’ (NDL) கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களிடம் அதிகரித்து இருக்கும் வேற்றுமையைக் களைவதே எங்களின் முதல் பணி. அதுமட்டுமல்லாமல், நலிவடைந்து இருக்கும் நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் பல்வேறு பிரிவுகளையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

மியான்மர் ஜனாதிபதியாக ஆங் சாங் சூகீ பதவி ஏற்பாரா? என்பது குறித்த கேள்விகளுக்கு என்டிஎல் கட்சியினர் கூறுகையில், “தேர்தலில் வெற்றி பெற்றால், மக்கள் விரும்பும் ஒருவர் ஜனாதிபதி ஆவார்” என்று சூசகமாகத் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

கடைசியாக 1990-ல் என்டிஎல் கட்சி மியான்மர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. எனினும், அதற்குச் சில நாட்களுக்கு முன்னரே ஆங் சாங் சூகீ கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். சுமார் 21 வருட வீட்டுச் சிறைக்குப் பிறகு உலக நாடுகளின் வற்புறுத்தலால், கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

மியான்மரில் தொடர்ந்து நடைபெற்று வரும் ரோஹின்யா முஸ்லிம்களின் படுகொலை, இவர் ஆட்சிக்கு வந்த பிறகாவது மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.