Home One Line P2 இலண்டன்: மியான்மார் தூதர் கட்டிடத்திற்கு வெளியே பூட்டப்பட்டார்

இலண்டன்: மியான்மார் தூதர் கட்டிடத்திற்கு வெளியே பூட்டப்பட்டார்

546
0
SHARE
Ad

இலண்டன்: இலண்டனில் உள்ள மியான்மார் தூதர் தனது தூதரகத்தினுள் நுழைய விடாமல் பூட்டப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

கியாவ் ஸ்வார் மின், தூதரக கட்டிடத்தை விட்டு வெளியேறுமாறு ஊழியர்களிடம் கேட்கப்பட்டதாகவும், அவர் இனி நாட்டின் பிரதிநிதி இல்லை என்றும் கூறப்பட்டதாகக் கூறினார்.

“நான் தூதரக கட்டிடத்திற்கு வெளியே பூட்டப்பட்டிருக்கிறேன்,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பிப்ரவரி 1-ஆம் தேதி மியான்மாரில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. பல வாரங்கள் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டி மற்றும் வன்முறையை அதிகரித்தது. கியாவ் ஸ்வார் மின்ன் தலைவர் ஆங் சான் சூகியை விடுவிக்க அழைப்பு விடுத்திருந்தார்.

சூகி மற்றும் தேசிய லீக் கட்சியின் அதிகாரத்திற்கு திரும்ப வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வரும் நிலையில், 500- க்கும் மேற்பட்டோர், குழந்தைகள் உட்பட இதுவரையிலும் கொல்லப்பட்டுள்ளனர்.