Home நாடு தஞ்சோங் காராங் படகு விபத்து: கடலுக்குள் சென்ற ஒரே குடும்பத்தின் 6 பேர் பலி!

தஞ்சோங் காராங் படகு விபத்து: கடலுக்குள் சென்ற ஒரே குடும்பத்தின் 6 பேர் பலி!

706
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512தஞ்சோங் காராங், ஜூலை 19 – தனக்கு நடைபெறவிருந்த திருமணத்திற்காக இந்துக் கடவுளின் ஆசி பெறவேண்டியும், சிலைகளை கடலுக்குள் விடவும், தனது குடும்பத்தாருடன் கடலுக்குள் படகில் சென்ற  27 வயதுடைய பெண்மணி ஒருவரும் அவருடன் சென்ற குடும்பத்தாருமாக 6 பேர், அப்படகு விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக பலியாகினர். இந்தச் சோகச் சம்பவம் தஞ்சோங் காராங் பகுதியில் (பாகான் சுங்கை காஜாங்) வியாழக்கிழமை நிகழ்ந்துள்ளது.

படகைச் செலுத்திய ஒருவரும் மாண்டதில் மரண எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

14 பேருடன் அன்றைய தினம் அப்படகு கடலுக்குள் சென்றது. பாகான் சுங்கை காஜாங் கடற்கரையிலிருந்து சுமார் 2 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது கடல் சீற்றம் காரணமாக அப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

#TamilSchoolmychoice

இதில் அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் சிலர், விரைந்து சென்று உயிருக்குப் போராடியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் அவர்களால் 7 பேரை மட்டுமே மீட்க முடிந்தது.

இறந்தவர்களில் 5 பேரின் சடலம் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், பாரியநாதன் (30 வயது) என்ற ஆடவரின் சடலம் பாகான் பாசிர் கடற்பகுதியில் சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது. சங்கர் என்ற மற்றொரு நபர் இன்னமும் தேடப்பட்டு வருகிறார்.

9 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 5 படகுக்காரர்கள் சம்பவத்தன்று படகில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.