சிரியாவின் புராதன நகரங்களில் விலைமதிக்க முடியாத பொருட்கள் எங்கெங்கு இருக்கின்றன என கேட்டு, ஐஎஸ் இயக்கத்தினர் தொடர்ந்து ஆசாத்தை துன்புறுத்தி வந்தனர். எனினும், ஆசாத் கடைசி வரை புராதன நகரங்களின் வளங்கள் பற்றி எவ்வித தகவல்களையும் தெரிவிக்காததால் அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை படுகொலை செய்துள்ளனர்.
சிரியாவின் பழமை வாய்ந்த நகரமான பால்ம்யிராவில், நேற்று அசாத்தின் தலை(படம்), பொது இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. மேலும், ஆசாத்தை படுகொலை செய்ததை அவர்கள் பெருமையுடன் தங்கள் வலைத்தளத்திலும் வெளியிட்டுள்ளனர்.