நேற்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி, அம்னோ மட்டுமே மலாய்க்காரர்களை இணைக்கும் என ஜோகூர் சுல்தான் நம்புவதாகக் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இளவரசர் துங்கு இஸ்மாயிலில் பதில் அமைந்திருக்கின்றது.
“நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை” என்று கூறியுள்ள துங்கு இஸ்மாயில் மாநில சுல்தானான தனது தந்தையாரை தங்களின் தனிப்பட்ட இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.
ஜோகூர் சவுத்தர்ன் டைகர்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் (Johor Southern Tigers Facebook page) துங்கு இஸ்மாயில் இவ்வாறு எழுதியுள்ளார்.
“அண்மையக் காலமாக, பலர் எனது தந்தையான ஜோகூர் சுல்தானுடன் நெருக்கம் பாராட்ட முயற்சி செய்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு யூகங்களும், ஆரூடங்களும், எழுந்துள்ளன. நான்தான் இந்த மாநிலத்தின் அடுத்த சுல்தானாகப் போகும் இளவரசர் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். எந்த ஒரு விஷயமும் சுல்தானின் செவிகளுக்குச் செல்வதற்கு முன்னால் எனக்குத் தெரியாமல் செல்ல முடியாது. எனது, விசுவாசம் எனது தந்தையான சுல்தானுக்கு மட்டுமே உரியதாகும் என்பதோடு, எனது மாநிலத்தின் ஆட்சியுடமைக்கும், எனது மக்களின் நலன்களுக்கும் மட்டுமே நான்முக்கியத்துவம் வழங்குவேன்” என்றும் துங்கு இஸ்மாயில் தனது பதிவில் கூறியுள்ளார்.