Home Featured நாடு மெர்டேக்கா கொண்டாட்டங்கள் புக்கிட் ஜாலிலுக்கு மாற்றப்பட்டன!

மெர்டேக்கா கொண்டாட்டங்கள் புக்கிட் ஜாலிலுக்கு மாற்றப்பட்டன!

565
0
SHARE
Ad

Merdeka-Eveகோலாலம்பூர் – இன்று இரவு டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறுவதாய் இருந்த தேசிய தினக் கொண்டாட்டங்கள் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்திற்கு மாற்றுப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

இதனிடையே, புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்திற்கு மாற்றுவதாக எடுக்கப்பட்ட முடிவில் எந்த ஒரு கட்சியின் தலையீடும் இல்லை என டாங் வாங்கி காவல்துறைத் தலைவர் ஏசிபி சைனல் சாமா தெரிவித்துள்ளார்.

“புக்கிட் ஜாலிலுக்கு மாற்றும் முடிவு ஞாயிற்றுக்கிழமைக்கு முன்பே எடுக்கப்பட்டது. தேசிய தின கொண்டாட்டங்கள் திட்டமிட்டபடி நடக்கும்” என்று டத்தாரான் மெர்டேக்காவில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice