Home இந்தியா இந்து-இஸ்லாமை இணைத்த இயற்கையின் திருவிளையாடல் – நெகிழவைக்கும் சம்பவம்!

இந்து-இஸ்லாமை இணைத்த இயற்கையின் திருவிளையாடல் – நெகிழவைக்கும் சம்பவம்!

433
0
SHARE
Ad

ganesh_vc1மும்பை – இந்தியா என்றாலே மதவாதிகளின் தேசம் என்ற போக்கு பரவலாக இருந்து வருகிறது. அதனை ஒப்புக்கொள்ளும் விதமாக பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட மாட்டு இறைச்சியை உட்கொண்டதாகக் கூறி இஸ்லாமியர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக் காரணம் காட்டி பல்வேறு மதவாத சக்திகள் கிளர்ச்சிகளை எழுப்பி வரும் நிலையில், இந்துவையும், இஸ்லாமையும் இணைக்கும் வகையில்  நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று மும்பையில் நிகழ்ந்துள்ளது.

மும்பையை சேர்ந்தவர் இலியாஸ் என்பவர் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கும் தனது மனைவி நூர்ஜகானை டாக்சி ஒன்றின் மூலம் மருத்துவமனை அழைத்துச் சென்றிருக்கிறார். குறுகலான சந்துக்கள் நிறைந்த அப்பகுதியில் டாக்சி ஓட்டுனரால் வேகமாக செல்ல முடியவில்லை.

muslim-woman-ganeshநூர்ஜகானுக்கு பிரசவ வலி அதிகமாக, பயந்து போன ஓட்டுனர், இருவரையும் பாதி வழியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். நடக்கப் போகும் அசம்பாவிதத்தை தவிர்ப்பதற்காக இலியாஸ், அருகில் இருந்த விநாயகர் கோயிலில் நூர்ஜகானை அமர வைத்துவிட்டு, மற்றொரு டாக்சியை பிடிக்கச் சென்றுள்ளார்.

#TamilSchoolmychoice

ஆனால், அதற்குள் நூர்ஜகானுக்கு பிரசவ வலி அதிகமாகிவிட்டது. அவரது அலறலைக் கேட்ட அருகே இருக்கும் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் பெண்கள், நூர்ஜகானை கோயிலுக்குள் அழைத்துச் சென்று பிரசவம் பார்த்தனர். அடுத்த சில நிமிடங்களில் நூர்ஜகானுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்பு, இருவரையும் அப்பகுதி வாசிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க உதவினர்.

இந்த சம்பவம் குறித்து நூர்ஜகான் கூறுகையில், “நான், சாலையின் நடுவே குழந்தையை பெற்றெடுத்து விடுவேனோ என்று பயந்தேன். ஆனால் அருகில் இருந்து விநாயகர் கோயிலை கண்டவுடன், கடவுளே என்னுடன் இருப்பதாக உணர்ந்தேன்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும், தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு ‘கணேஷ்’ என்று பெயர் சூட்டி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மதவாதிகளின் சுயநல அரசியல் பெருகி வரும் நிலையில், இது போன்ற சம்பவங்கள் தான் இந்தியாவில் மனிதம் சமநிலையில் இருக்க உதவுகிறது.