அதற்கு வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ள விஷால் “தமிழக முதல்வர் அம்மாவை தேவையில்லாமல் இதில் சம்பந்தப்படுத்தப் பார்க்கின்றார்கள். அம்மா மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கின்றது. அவரை நாங்கள் எப்போதும் அவமதித்ததில்லை” எனக் கூறியிருக்கின்றார்.
“அம்மா சினிமாவுக்கு பல வகைகளிலும் உதவி வருகின்றார்கள். குறிப்பாக சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப் போவதாக அறிவித்திருக்கின்றார்கள். அதோடு அண்மையில் உடல் நலம் குன்றியிருக்கும் பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மாவுக்கு கணிசமான நிதி உதவியும் வழங்கியிருக்கின்றார்கள். அவரை நாங்கள் மிகவும் மதிக்கின்றோம். தேவையில்லாமல் நாங்கள் அவரை அவமதிப்பதாகக் கூறியிருக்கும் தாணுவை (படம்) நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்றும் விஷால் கூறியிருக்கின்றார்.