Home Featured கலையுலகம் ஸ்ரீதேவிக்கு எதிராக புலி படத் தயாரிப்பாளர் பரபரப்பு அறிக்கை!

ஸ்ரீதேவிக்கு எதிராக புலி படத் தயாரிப்பாளர் பரபரப்பு அறிக்கை!

672
0
SHARE
Ad

sridevi-puliசென்னை – ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்கள் அப்படத்தில் நடித்ததற்காக தனக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகை 50 லட்சத்தை கொடுக்காமல் தவிர்த்து வருகின்றனர் என நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக ‘புலி’ பட தயாரிப்பு நிறுவனங்கள் சிபு தமின்ஸ், எஸ்கேடி ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ”ஸ்ரீதேவி மீது எங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது. கடந்த ஓரிரு நாட்களாக ஸ்ரீதேவிக்கு நாங்கள் சம்பள பாக்கி வைத்துள்ளதாக அவர் புகார் அளித்துள்ளார் என்று வெளியான செய்திகளைக் கண்டு வேதனை அடைந்தோம். அந்த புகாருக்கு பதில் கூற வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.”

“புலி படத்தில் ஸ்ரீதேவியை ஒப்பந்தம் செய்ய 2.70 கோடியும், சேவை வரிக்கு 30 லட்சம் என மொத்தம் 3 கோடி சம்பளம் பேசியிருந்தோம். பேசியபடி சம்பளமும் கொடுத்து வந்தோம்.”

#TamilSchoolmychoice

“ஆனால், படப்பிடிப்பு முடியும் தருவாயில் ‘புலி’ படத்தை தெலுங்கு, இந்தியில் டப்பிங் (ஒலிச்சேர்க்கை) செய்தால் கூடுதல் பணம் தர வேண்டும் என்று ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் கோடிக்கணக்கில் பணம் கேட்டார். மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியாகும் படங்களின் உரிமை தயாரிப்பாளர்களுக்கு மட்டும்தான் உள்ளது. விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட யாருமே இப்படி கூடுதல் பணம் கேட்கவில்லை என்று விளக்கினோம். ஆனால், இதை போனிகபூர் ஏற்றுக்கொள்ளவில்லை. கூடுதல் பணம் கொடுத்தால்தான் ஸ்ரீதேவி ஷூட்டிங் வருவார் என்று சொல்லிவிட்டார்.”

“படப்பிடிப்பு தடைபடக்கூடாது என்பதற்காக தெலுங்கு டப்பிங்கின்போது ரூ.15 லட்சமும், இந்தியில் டப்பிங் பேச இந்தி சாட்டிலைட் பணத்தில் 20% தருவதாக ஒப்புக்கொண்டோம். ஆனால், இதை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் எதிர்த்தனர். இது வியாபார முறையில் இல்லாத ஒன்று என்று கூறினார்கள்.”

“இந்தி சாட்டிலைட் உரிமையை மனீஷுக்குக் கொடுத்தோம். அதிலிருந்து 20% பணமாக 55 லட்சம் பணத்தை ஸ்ரீதேவி சார்பில் போனிகபூர் வாங்கினார். நாங்கள் பேசியபடி சம்பளம் கொடுத்துவிட்டோம்.”

“இந்தியில் ‘புலி’ படத்தை வெளியிடு செய்யுங்கள். ஸ்ரீதேவிக்கு நல்ல வியாபாரம் உள்ளது என்று போனிகபூர் சொன்னார். அதனால் ஒரு கோடிக்கு மேல் செலவு செய்து இந்தியில் ‘புலி’ படத்தை ரிலீஸ் செய்தோம். ஆனால், ஒரு ரூபாய் கூட எங்களுக்கு வரவில்லை. ‘புலி’ படத்துக்கு நாங்கள் 3 ஆடை வடிவமைப்பாளர்களை நியமித்து இருந்தோம். ஆனால், ஸ்ரீதேவி மனிஷ் மல்ஹோத்ராதான் வேண்டும் என்று கேட்டார்.”

“அவரை நியமித்ததால் 50 லட்சத்துக்கும் மேல் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டது. எனவே, எங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியையும், நஷ்டத்தையும் மனதில் கொண்டு இந்த பிரச்சினை சுமுகமாக முடிக்க வேண்டும்” ” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.