வாரணாசி – இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே நரேந்திர மோடியின் அடுத்த கனவுத் திட்டமான புல்லட் இரயில் எனப்படும் அதிவேக விரைவு இரயில் திட்டம் இந்தியாவுக்குள் வருவதற்கு வித்திட்டுள்ளார்.
மும்பாய்-அகமதாபாத் நகர்களுக்கு இடையிலான முதல் புல்லட் இரயிலை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயும், கையெழுத்திட்டுள்ளனர்.
ஷின்சோ அபேயின் வருகையை முன்னிட்டு இன்று வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட கங்கைக் கரை – கங்கா ஆர்த்தி நிகழ்ச்சியின் போது…
இன்று கங்கைக் கரையில் பிரபலமான கங்கா ஆர்த்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, மோடியுடன் வருகை தருவதை முன்னிட்டு, வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ள கங்கைக் கரைப் பகுதி