Home Slider ‘பிபா’ தலைவர் செப் பிளாட்டருக்கு 8 ஆண்டுகள் தடை!

‘பிபா’ தலைவர் செப் பிளாட்டருக்கு 8 ஆண்டுகள் தடை!

653
0
SHARE
Ad

fifaஜூரிச் – அனைத்துலக கால்பந்து சம்மேளனத்தில் (பிபா) ஊழல் புகாரில் சிக்கிய பிபா தலைவர் செப் பிளாட்டர் மற்றும் துணைத்தலைவர் பிளாட்டினிக்கு பிபா நன்னடத்தைக் குழு, 8 ஆண்டுகள் தடைவிதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் அனைத்துலக கால்பந்து கூட்டமைப்பு (பிபா) தலைமையகம் உள்ளது. இதன் தலைவராக செப் பிளாட்டர் 5-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

அவரது தலைமையில் நடந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியில், போட்டியை நடத்தும் நாடுகளை தேர்வு செய்தல், ஒளிபரப்பு உரிமை வழங்குதல் போன்றவற்றில் பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்டது.

#TamilSchoolmychoice

சுவிட்சர்லாந்து காவல்துறை, ஊழல் புகாரில் ஈடுபட்ட பிபா நிர்வாகிகளை கைது செய்தது. இறுதியாக, பிளாட்டரும் நடந்த தவறுக்குப் பொறுப்பேற்று பதவி விலகினார்.

இந்நிலையில், இந்த ஊழல் புகார் குறித்து விசாரித்த பிபா நன்னடத்தைக் குழு, செப் பிளாட்டர் மற்றும் பிளாட்டினிக்கு 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இந்தக் காலத்தில் சம்பந்தப்பட்டவர்கள், கால்பந்து தொடர்பான எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது.

இதற்கிடையே, புதிய தலைவருக்கான தேர்தல், 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.