Home Featured கலையுலகம் தண்டனைக் காலத்திற்கு முன்னதாகவே சஞ்சய் தத் விடுதலையாகிறார்!

தண்டனைக் காலத்திற்கு முன்னதாகவே சஞ்சய் தத் விடுதலையாகிறார்!

559
0
SHARE
Ad

Dutt_மும்பை – மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிக்கு உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், வரும் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி விடுதலை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1993-ம் ஆண்டு, மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக ஏகே-56 ரக துப்பாக்கிகள் வைத்திருந்ததாக சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஏற்கனவே 1996-ல் கைது செய்யப்பட்ட அவர், ஜாமீனில் விடுதலை செய்யப்படுவதற்கு முன் 18 மாதங்கள் சிறையில் இருந்தார். எஞ்சிய 42 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் புனேவில் உள்ள எரவாடா மத்திய சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடைக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

எஞ்சிய தண்டனைக் காலம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை உள்ளது. இந்நிலையில், நன்னடத்தை காரணமாக அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய மராத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. அதன் படி வரும் பிப்ரவரி 27-ல் அவர் விடுதலை செய்யப்படுவார் அறிவிக்கப்பட்டுள்ளது.