இதற்கிடையே தேர்தல் சமயத்தில், மக்கள் கவனமும், ஊடகங்களின் கவனமும் தம் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காகவே கருணா, இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜாராகிறார் என்று கூறப்பட்டு வந்தது. அதற்கேற்றார் போல், கருணாநிதியின் நீதிமன்ற வருகை உள்ளூர் ஊடகங்கள் முதல் தேசிய ஊடகங்கள் வரை முக்கியச் செய்தியாக இடம்பிடித்தது. தங்கள் தலைவர் முதுமையிலும் வழக்குகளை நேரடியாக சந்திக்கிறார் என திமுக தொண்டர்கள் மத்தியிலும் எழுச்சி ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் முணுமுணுக்கப்படுகிறது.
Comments