கோலாலம்பூர்: நேற்று காலை சிரம்பான் நெடுஞ்சாலையில் கார் ஒன்று மோதியதில் 3 பேர் பலியான சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், உடனடியாக செராசிலுள்ள எச்.யு.கே.எம் (HUKM) மருத்துவமனைக்கு விரைந்து சென்று பாதிப்படைந்தவர்களை நேரில் கண்டார்.
சுப்ராவின் வருகையின்போது, மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோஸ்ரீ வேள்பாரியும், மஇகா இளைஞர் பகுதித் தலைவர் சிவராஜூம் உடனிருந்தனர்.