Home Featured இந்தியா நரேந்திர மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நரேந்திர மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

582
0
SHARE
Ad

modi-1கோயம்புத்தூர் – நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாளை பிப்ரவரி 2-ம் தேதி, தமிழகத்தின் கோயம்புத்தூருக்கு வருகின்றார்.

இதனால் கோவையில் கடந்த வியாழக்கிழமை முதல் சுமார் 6000 காவல்துறையினர் குவிக்கப்பட்டு, கடுமையான 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை மதியம் 2.30 மணியளவில் கோவை விமான நிலையத்திற்கு வருகை புரியும் மோடி, பின்னர் காமராஜ் சாலையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையைத் திறந்து வைப்பார். அதன் பின்னர் கொடிசியா கிரவுண்ட் என்ற இடத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுவார்.

#TamilSchoolmychoice

அதன் பின்னர், அவினாசி சாலையில் உள்ள சர்கியூட் ஹவுஸ் என்ற இடத்தில் சற்று ஓய்வெடுத்த பின்னர், அங்கிருந்து புறப்படுவார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.