அன்வாரின் வழக்கறிஞர் 48 மணி நேரத்தில் அன்வாரின் மீது சுமத்தப்பட்ட அவதூறைத் திரும்ப பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்குமாறு முகமட் அஸ்ரியிடம் உத்தரவிட்டதாக பி.கே.ஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையின் வழி தெரிவித்தார்.
அன்வாரின் வழக்கறிஞர் இந்த செய்தியைப் பிரசுரித்ததற்கு இதற்கான நஷ்ட ஈடாக முகமட் அஸ்ரி 100 மில்லியன்களை வழங்க வேண்டும் என்று தனது மனுவில் கூறியுள்ளர்.
“என் மீது அவதூறு சுமத்திய குற்றத்திற்காக அம்னோவுடன் மிகுந்த தொடர்பு கொண்ட பபகோமோ மீது எனது வழக்கறிஞர்கள் குழு மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பேன் ” என்று அன்வார் நேற்று டிவிட்டர் என்ற இணைய வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தார்.