Home Featured நாடு ஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவில் இடம் கொடுப்பது ஏன்? – சாஹிட்டுக்கு ஹிண்ட்ராப் கேள்வி!

ஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவில் இடம் கொடுப்பது ஏன்? – சாஹிட்டுக்கு ஹிண்ட்ராப் கேள்வி!

587
0
SHARE
Ad

zakir-naikகோலாலம்பூர் – இந்தியாவில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக், மலேசியாவில் சமய உரையாற்றுவதற்கு அழைக்கப்படுவது ஏன் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி விளக்கமளிக்க வேண்டும் என ஹிண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் பி.வேதமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளிக்கிழமை ஆராவ் நகரிலுள்ள பள்ளி வாசலில் சமய உரையாற்றுவதற்கு ஜாகிர் நாயக், பெர்லிஸ் முப்தியால் அழைக்கப்பட்டுள்ள தகவலை அறிந்து தாம் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஜாகிர் நாயக்கிற்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டதாக வந்த தகவல் குறித்து ஏற்கனவே ஹிண்ட்ராப் கேள்வி எழுப்பியது என்றும், அதனை மலேசிய அரசாங்கம் மறுத்தது என்பதையும் சுட்டிக் காட்டிய வேதமூர்த்தி, தற்போது ஜாகிர் நாயக்கிற்கு நிரந்தர வசிப்பிடம் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை உள்துறை அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, இந்தியாவில் விசாரணையை எதிர்நோக்கி வரும் ஜாகிர் நாயக்கிற்கு, மலேசியாவில் இடம் கொடுத்து, அவரை சமய உரையாற்ற அழைக்கும் அரசாங்கத்தின் உள்நோக்கம் கேள்விக்குரியதாகியுள்ளதாகவும் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.