Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர் செல்வம் தியான நிலையில் அமர்ந்தார்!

ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர் செல்வம் தியான நிலையில் அமர்ந்தார்!

768
0
SHARE
Ad

panneer selvam-jayalalithaa memorialசென்னை – (மலேசிய நேரம் இரவு 11.45 நிலவரம்) தமிழகத்தின் முதல்வராகப் பதவி விலகியிருக்கும் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் சமாதியில் தற்போது தியான நிலையில் அமர்ந்து இருப்பது தமிழகத் தொலைக்காட்சிகளில் பரபரப்பான நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

சுமார் 15 நிமிடங்களாக ஜெயலலிதா சமாதி  தியான நிலையில் தனியாக அமர்ந்திருக்கிறார் பன்னீர் செல்வம். இதற்கான காரணம் தெரியவில்லை.

மலர் வளையம் ஒன்றைக் கொண்டு வந்து சமாதியில் வைத்து வணங்கிய பின்னர் அங்கேயே கண்களை இறுக மூடிக் கொண்டு பன்னீர் செல்வம் அமர்ந்திருக்கிறார்.