(முனைவர் முனீஸ்வரன் குமார், எழுத்தாளர் அரவிந்த் யுவராஜ்)
படைப்புத் துறையிலும் திரைத்துறையிலும் பதினைந்து ஆண்டுகளாகச் செயலாற்றி வரும் அரவிந்த் யுவராஜ், இந்தியாவில் உள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்வி, இலக்கியம், படைப்பாக்கம், உளவியல் தொடர்பான உரைகளைகளையும், ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் தொடர்ந்து வழங்கி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படைப்பாக்கம் தொடர்பான பயிற்சிப் பட்டறையை வழிநடத்துவதற்காக உப்சி பல்கலைக்கழகத்துக்குச் சிறப்பு வருகை புரிந்திருந்த இவர், புத்தகத்தின் சிறப்பு அழைப்பை ஏற்று முதல் சிறுகதை வகுப்பை வழிநடத்தினார். ஊடகவியலாளராகவும் வலைத்தள எழுத்தாளராகவும் இயங்கிவரும் இவர் படைப்பாக்கத்தில் குறிப்பாக சிறுகதைகளில் தனது பதினைந்து ஆண்டு கால அனுபவங்களைப் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். சிறந்த எழுத்தாளர் ஆவதற்கு முன்பு ஒவ்வொருவரும் முதலில் சிறந்த வாசகராக இருக்க வேண்டும் என்று பல இடங்களில் அழுத்திக் குறிப்பிட்ட அவர், புதுமைப்பித்தனின் தலைசிறந்த சிறுகதைகளில் ஒன்றான கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் கதையைப் பற்றிய கலந்துரையாடலுடன் இம்முதல் வகுப்பை வழிநடத்தினார்.
அடுத்தத் தலைமுறையினர் சிறுகதை இலக்கியத்தை உய்த்துணரவும் அதன்வழி எழுத்துத் துறையில் காலடி எடுத்து வைக்கவும் இவ்வகுப்பு வித்திடும் என்ற நம்பிக்கையோடு இவ்வகுப்பு நடத்தப்படுகிறது என்று புத்தகத்தின் தோற்றுனரும் தலைவருமான முனைவர் முனீஸ்வரன் குமார் செல்லியலோடு பகிர்ந்து கொண்டார்.