சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் என்ற பகுதியில், தொடர்ச்சியாக கார்கள், வேன்கள், மின் மோட்டார் சைக்கிள்கள் என வாகனங்கள் பல தீப்பற்றி எரியத் தொடங்கின.
இந்நிலையில், அப்பகுதிவாசிகள் பலரும் இது குறித்து காவல்துறையிடம் புகார் செய்தனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வாகனங்களுக்குத் தீ வைத்தது ஒரு பெண் என்பது தெரியவந்தது.
அவரைக் கைது செய்து காவல்துறை விசாரணை செய்த போது, அவரது செல்ல நாய் ஒன்று காரில் அடிபட்டு மரணமடைந்தது தெரியவந்திருக்கிறது.
Comments