Home Featured உலகம் குடையைப் பாராசூட் போல் நினைத்து 10-வது மாடியிலிருந்து குதித்த சிறுவன்

குடையைப் பாராசூட் போல் நினைத்து 10-வது மாடியிலிருந்து குதித்த சிறுவன்

872
0
SHARE
Ad

chinaapartmentபெய்ஜிங் – சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் சூசோ என்ற பகுதியைச் சேர்ந்த, அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், வீட்டில் கார்டூன் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன், அந்தக் கார்டூன் கதாப்பாத்திரத்தில் வருவது போல், குடையை பாராசூட் போல் நினைத்து 10-வது மாடியிலிருந்து குதித்து பலத்த காயமடைந்திருக்கிறான்.

அவனுக்கு அவசர அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் நிலையில், உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

10-வது மாடியிலிருந்து குதித்த போது, அதிருஷ்டவசமாக இடையில் மின் கம்பி ஒன்று வேகத்தைத் தடுத்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.