Home Featured இந்தியா நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதியானது!

நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதியானது!

1397
0
SHARE
Ad
?
புதுடெல்லி – டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், டெல்லி உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இறுதித் தீர்ப்பு அறிவித்தது.

அத்தீர்ப்பின் படி, குற்றவாளிகள் நால்வருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் விதித்திருந்த தூக்கு தண்டனையை, உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

கடந்த 2012-ம் ஆண்டு புதுடெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு, வெளியே தூக்கி வீசப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் ஒருவர் மைனர் என்பதால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டார். மற்றொருவர் சிறையில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மற்ற நால்வருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, கடந்த 2014-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது குறிப்பிடத்தக்கது.