Home Featured தமிழ் நாடு மோடியைச் சந்திக்க புதுடில்லி சென்றார் எடப்பாடி!

மோடியைச் சந்திக்க புதுடில்லி சென்றார் எடப்பாடி!

822
0
SHARE
Ad

palanisamy-tamil nadu cm

சென்னை – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பான அரசியல் சூழலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க புதுடில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவருக்கும் மோடிக்கும் இடையிலான சந்திப்பு நாளை புதன்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் நாளை மறுநாள் வியாழக்கிழமை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இன்று செவ்வாய்க்கிழமை சில சட்டமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்ததும் தமிழக அரசியலில் பல்வேறு ஊகங்களுக்கும், ஆரூடங்களுக்கும் வழி வகுத்திருக்கிறது.