கடந்த ஆண்டு தான் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கும், கெவின் கேர் நிறுவன தொழிலதிபர் சி.கே. ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்திற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில், விக்ரமின் மகன் துருவ், தற்போது திரையுலகில் நுழையவிருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வம் கொண்ட துருவ், சினிமாவில் நடிகராக அறிமுகமாவாரா? அல்லது தொழில்நுட்பத்துறையில் நுழைவாரா? என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
சில தினங்களுக்கு முன்பு தந்தையும் மகனும் ஒன்றாகச் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் பலராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.