Home இந்தியா அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை திறக்க மோடி வருகை!

அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை திறக்க மோடி வருகை!

768
0
SHARE
Ad

abdulkalammuseumராமேஸ்வரம் – ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டிருக்கும் அப்துல் கலாம் நினைவு மண்டபத்தைத் திறந்து வைக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாளை வியாழக்கிழமை தமிழகம் வருகிறார்.

கலாம் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் பேக்கரும்பில் சுமார் மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவிடத்தில் அருங்காட்சியகம், பூங்கா, வாகனம் நிறுத்துமிடம், அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

அதேவேளையில், கலாமின் இளமைக் காலம் முதல் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த காலம் வரையிலான முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள், காலத்தால் அழியாத ஓவியங்களாக நினைவிடத்தில் வரையப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி ஷில்லாங்கில் பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றச் சென்ற கலாம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

கலாமின் உடல் அவரது பிறந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அருகே உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.